Minute workers - Start earning today

minute workers

Monday, 5 December 2011

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

  • நம் அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று இணையம். இன்றும் நம்மவரில் பலர் இணையத்தை ஒரு பொழுதுபோக்கு சாதனம் போலவும், தகவல்களை தேடுவதற்கு பயன்படுத்தும் ஒரு கருவியை போலவும் தான் பயன்படுத்தி வருகிறோம். இணையம் (இன்டர்நெட்) என்பது அதற்கெல்லாம் மட்டும் அல்ல. அது நம் வாழ்வையே மாற்ற கூடிய ஒன்று. இணையத்தை முறையே பயன்படுத்தி நம் ஓய்வு நேரங்களில் எளிதாக சம்பாதிக்கலாம்!

  • உங்களுக்கென ஒரு இணைய வசதியுடன் கூடிய கணினி வேண்டும். இதை தவிர உங்களுக்கென எந்த ஒரு முதலீடும் தேவையில்லை.

  • நீங்கள் இங்கே கூறப்பட்டுள்ள வழிகளின் மூலம் சம்பாதிக்கும் வருமானங்களை சேமிக்க உங்களுக்கென ஒரு இணையவங்கி கணக்கு (இ-பேங்க் அக்கௌன்ட்) வேண்டும். இணையவங்கி கணக்கு தொடங்குவது மிகவும் சுலபம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் கணினி மூலம் எளிதாக சில சொடுக்குகளில் உங்களுக்கென ஒரு இணையவங்கி கணக்கை தொடங்கி விடலாம். முதலில் http://www.alertpay.com/என்ற முகவரிக்கு செல்லவும். பின்பு, "Signup now" என்ற பட்டனை கிளிக் செய்யவும். முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை போன்ற திரை தோன்றும்.


முதல் படிவம்

முதலில் உங்களது நாட்டை தேர்வு செய்யவும். பிறகு, "Personal starter" என்பதை கிளிக் செய்யவும். அதன்பிறகு "Next" என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும். இதன்பின் கீழுள்ள படத்தை போன்ற திரை தோன்றும்.அதில் கொடுக்கபட்டுள்ள கட்டங்களை நிரப்பவும். பின்பு, "Next" பட்டனை அழுத்தவும்.


இரண்டாம் படிவம்

இறுதியாக, ஒரு திரை கீழே உள்ள படம் போல தோன்றும். அதனை பூர்த்தி செய்யவும். நிரப்பும் பொழுது "Transaction pin" என்ற கட்டத்தை நீங்கள் நிரப்ப வேண்டும். அது வெறும் கடவுச்சொல் (password) போன்றதே. அதில் நிரப்பும் சொல்லை நினைவில் வைத்து கொள்ளவும். அது, வேண்டும் நேரத்தில் பணத்தை எடுக்க தேவையானது. அணைத்து கட்டங்களையும் நிரப்பிய பின், சமர்பிக்கவும்.


மூன்றாம் படிவம்

உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு இ-மெயில் உடனடியாக அனுப்பப்படும். அதில் உள்ள வலை முகவரியை கிளிக் செய்யுங்கள். உங்கள் அக்கௌன்ட் ஆக்டிவேட் ஆகி விடும். உங்களது இணையவங்கி கணக்கு இப்போது உபயோகிக்க ஏற்றது

கவனிப்பிற்கு !

  • இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகள் வழியாக கிட்டும் வருமானம் பெரும்பாலும் அமெரிக்க டாலராகவே இருக்கும். அதனை இந்திய ரூபாயாக மாற்ற இணையத்தில் பல வலைப் பக்கங்கள் உள்ளன. அவ்வளவு ஏன்? அலட்பேவில் கூட பணப்பரிமாற்றம் செய்யலாம். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் போது பணமாற்றம் செய்து நல்ல வருமானம் பெறலாம்.

  • இணையத்தில் பல வலைப்பக்கங்கள் ஓய்வு நேரத்தில் சம்பாதிக்கும் பொருட்டு உள்ளன. இருந்தாலும், மிகவும் சிறந்த பத்து வலை தளங்களை மற்றும் தேர்ந்து எடுத்துள்ளேன். இவை அனைத்தும், இணையத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக தங்கள் சேவைகளை சிறப்பாக வழங்கி வருகின்றன. ஒரு வலைதளத்திற்கு, குறிப்பாக நிதி தொடர்பான வலைபக்கத்திற்கு, நம்பகதரம் அவசியம். இங்குள்ள அனைத்து வலை தளங்களும் நம்ப தகுந்தவை.

  • இங்கு கொடுக்கப்பட்டுள்ள வலைதளங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கௌன்ட்களை ஒரே கணினி அல்லது ஒரே இணைய இணைப்பை கொண்டு தொடங்க கூடாது.


எவ்வாறு சம்பாதிக்கலாம்?


முதல் வழி - சிறு வேலைகளை செய்தல்

இந்த வழி மூலம் எளிதாக சம்பாதிக்கலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைடில் நீங்கள் சிறு வேலைகளின் (கிளிக் செய்தல், சில வலைப்பக்கங்களில் சைனப் செய்தல் போன்றவை) பட்டியலைக் காணலாம். ஒவ்வொரு வேலையை முடித்தவுடன் அதற்குரிய பணம் தரப்படும். நாம் நம் நண்பர்களுடன் சமூக வலைப்பக்கங்களில் ச்சேட் (Chatting) செய்கிறோம். அதே வேலையை இந்த வெப்சைட்டில் நாம சம்பாதிக்க செய்யலாம். இப்பக்கத்தில் "forum" என்ற பகுதியில் பல தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நம் கருத்துக்களைக் கூற வேண்டும். அதற்கு பணம் தரப்படும். நீங்களும் புதிய தலைப்புகளைத் தொடங்கலாம்.உங்கள் தலைப்புக்கு நிறைய பதில் கிடைத்தால் உங்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும். எனவே சுவாரசியமான தலைப்புகளைத் தொடங்குங்கள். இந்த வழி முக்கியம். தவறாதீர்கள்.




இரண்டாம் வழி - விளம்பரங்களை கிளிக் செய்தல்

இது மிகவும் எளிமையான வழி. விளம்பரங்களைக் கிளிக் செய்து பணம் பெறலாம். இந்த சேவையை வழங்கும் வலைப்பக்கங்கள் பி.டி.சி (PTC) எனப்படும். இணைவதற்கு இவை இலவசமானவை. இங்கு ஏழு பழைய, நல்ல பி.டி.சிகளின் முகவரிகள் உள்ளன. ஒரு நாளைக்கு ஒவ்வொன்றிலும் 5 விளம்பரங்களைக் கிளிக் செய்தால், 7X5= 35 கிளிக்கள். ஒரு கிளிக்கிற்கு 0.01$. எனவே 35 கிளிக்களுக்கு 0.35$ கிடைக்கும். ஒரு மாதத்திற்கு 10-11$ கிடைக்கும். நல்ல பொழுதுபோக்குடன் கூடிய வருமானம்.




மூன்றாம் வழி - படம், இசை, வீடியோக்களை பகிர்ந்து கொள்ளுதல்

இன்று ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் அக்கவுண்ட் (account) இல்லாதவர்களைக் காண்பது எளிதல்ல.இந்த சமூக வலைப்பக்கங்கள் வழியாக நாம் நம் நண்பர்களுக்கு படங்கள், வீடியோக்கள்,பாடல்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.இதே செயலைக் கொண்டு நாம் எளிதாக ஓர் வலைதளம் வழியாகப் பணம் ஈட்டலாம். இணைவதற்கு இப்பக்கம் முற்றிலும் இலவசம். இதில் படங்கள், வீடியோக்கள், பாடல்களைப் பதிவேற்றம் (upload) செய்ய வேண்டும்.எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்யலாம். ஓரே நேரத்தில் பல பதிவேற்றம் வேண்டுமானாலும் செய்யலாம்.நீங்கள் பதிவேற்றம் செய்த படங்கள், வீடியோக்கள், பாடல்களை யாரேனும் பதிவிறக்கம் (download) செய்தால் உங்களுக்கு பணம் (ஒரு பதிவிறக்கம் 0.5$) கொடுக்கப்படும். ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் உங்களுடைய படங்கள், வீடியோக்கள், பாடல்களின் பதிவிறக்க வலைமுகவரியை அனுப்புங்கள். இதனால் எளிதாக பதிவிறக்கங்களை பெறலாம்.



நான்காம் வழி - adfly

இது மிகவும் எளிமையான ஓர் வழி.கீழுள்ள முகவரிக்கு சென்று உங்களுக்கென ஒரு அக்கௌன்ட் தொடங்கவும். பின், நீங்கள் விரும்பும் எந்த ஒரு வலை முகவரியையும் முதல் பக்கத்தில் உள்ள கட்டத்தில் டைப் செய்து, பின்னர் "intermission advert" (வலைமுகவரிக்கு உரிய பக்கத்திற்கு முன் ஒரு விளம்பரம் காண்பிக்கப்படும்) அல்லது "Top banner advert" (வலைபக்கத்தின் மேல் சிறிய விளம்பரம் காண்பிக்கப்படும்) என்பவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, "shrink" என்ற பட்டனை அழுத்தவும். பின், உங்களுக்கென ஒரு சிறிய வலைமுகவரி கிடைக்கும். அதை நீங்கள் விரும்பும் எந்த ஒரு வலைபக்கத்திலும் பேஸ்ட செய்யலாம். எவரேனும் அதை கிளிக் செய்தல் உங்களுக்கு வருமானம் கிட்டும்.


Saturday, 3 December 2011

படிக்க தவறாதீர்கள்! வாழ்வை வளமாக்க சில யோசனைகள்..

வழிகாட்டி

இன்று உங்களிடம் ஒரு ரூபாய் தருகிறேன். அதை தினசரி இரட்டிப்பாக்குங்கள்.

இரண்டாவது நாள் 2ரூபாய்.
மூன்றாவது நாள் 4 ரூபாய்.
நான்காவது நாள் 8ரூபாய்.
ஐந்தாவது நாள் 16 ரூபாய்....

இப்படி இரட்டிப்பாக்கிக்கொண்டே செல்லுங்கள். ஒரு மாதம் சென்றபின், அதாவது முப்பது நாட்கள் கழித்து நீங்கள் தினமும் இரட்டிப்பாக்கி வைத்திருக்கும் பணத்தை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக பத்து கோடி ரூபாய் தருகிறேன். நான் ரெடி நீங்கள் ரெடியா?

முப்பது நாட்கள் சென்றபின், அந்த தொகை 50 கோடியை தாண்டி இருக்கும். இந்த ஒரு நாள் கணக்கு என்பது ஒரு வருடம் என்று எடுத்துக்கொள்ளுங்கள். சம்பாதிக்கக்கூடிய வருடங்களாக முப்பது ஆண்டுகளை எடுத்து கொள்ளுங்கள். இப்போது 25 வயது. இன்று உங்கள் கையில் வெறும் ஒத்தை ரூபாய் இருக்கட்டும். பரவாயில்லை. அதை ஒரு வருடத்தில் இரட்டிப்பு ஆக்குங்கள். முப்பது வருடங்களில் உங்கள் 55ஆவது வயதில் உங்களிடம் இருப்பது 50 கோடி.

ஒரு ரூபாயை வைத்து ஆரம்பிக்கும் பொது ஆரம்பத்தில் மிக மிக மெதுவான வளர்ச்சி காணப்படுகிறது. ஆண்டுகள் செல்ல செல்ல உங்கள் பணம் நான்கு கால் பாய்ச்சலில் வளர்ச்சி அடைகிறது. விடாமுயற்சியுடன் உழைத்து பாருங்கள். வெற்றி உங்கள் கைவசம்.

முட்டிக்கொண்டு நிற்கிறது லோக்பால்!

தேசத்தை காக்க எழுந்த புரட்சி
இன்று நம்மிடையே லஞ்ச ஊழலை தடுக்க அரசு சாராத சுயேட்சையான, அதிகாரம் கொண்ட அமைப்பு எதுவும் இல்லை. அதற்கு தீர்வாக வந்தது தான் லோக்பால். அனால் அதனை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் அண்ணா ஹசாரே தலைமையில் ஆன சமூக அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், அரசு பிரநிதிகளுக்கும் இடையே கருத்து மோதல். இருவரும் தனி தனி வரைவுகளை முன் வைக்கின்றனர்.

அரசியல்வாதிகள் லோக்பால் அமைப்பிற்குள் இருக்ககூடாது என்பது லோக்பாலின் முக்கிய குறிக்கோள். ஆறு அரசியல் பிரமுகர்களை அமைப்பினுள் சேர்க்கவேண்டும் என்கிறது அரசு. மேலும் சி.பி.ஐயின் ஊழல் விசாரிப்பு பிரிவு லோக்பால் அமைப்பினுள் இணைக்கப்பட கூடாது என்பது அரசின் நிபந்தனை. அரசு சாரா குழுதான் லோக்பால். அதில் எப்படி ஆறு அரசியல் பிரமுகர்களை இடம் பெறவைப்பது என்பது லோக்பால் பிரதிநிதிகளின் பதில்.

மேலும், பிரதமரை லோக்பால் விசாரணைக்கு உட்படுத்தகூடாது எனும் அரசின் கோரிக்கையை அறவே மறுக்கின்றனர் லோக்பால் குழுவினர். உயர்நிலையில் இருக்கும் நீதிபதிகளும் லோக்பால் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்னும் லோக்பாலின் கோரிக்கையை அரசு மறுக்கிறது. உச்ச நீதி மன்றத்திற்கு கட்டுப்பட்ட லோக்பால் எவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்கலாம் என்பது அரசின் விவாதம்.

இப்படி வாக்குவாதங்களிலேயே இன்னும் லோக்பால் முறை சட்டமாக்கபடாமல் உள்ளது. ஊழலை ஒழிக்க வரைமுறைகள் சிறிது கண்டிப்பாக இருக்க வேண்டும். அதனை தளர்த்த நினைத்தால் ஊழல் எவ்வாறு ஒழியும்?

நம் நாட்டின் சாபக்கேடு

எச்சரிக்கை: அடுத்த வரியை படிக்கும் போது அதிர்ச்சி ஆகி விடாதீர்கள். சுமார் ஆறு கோடி இந்திய குழந்தைகள் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளும், சுதந்தரமும் மறுக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தொழிலாளர்களாக முடக்கப்பட்டுள்ளனர். உணவகங்களில் மேஜை துடிப்பது, டி கிளாஸ் கழுவுவது என்பதில் தொடங்கி போதை பொருள் கடத்துவது, பிக் பாக்கெட் உள்ளிட்ட சட்ட விரோத காரியங்கள் வரையில் எராளமான பணிகளில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வழியறியாத பாதையில்...

அதை விட அதிர்ச்சி தரம் தகவல்: இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் சேர்க்கபடுகிறது.

வெளிநாட்டு வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய் கருப்புப்பணம் பதுக்கல் விவகாரம் குறித்து சூடான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு நிர்பந்தம் உருவாகி வருகிறது. அனால் இந்தியாவிலேயே கணிசமான அளவு கருப்பு பணம் பதுங்கி கிடக்கிறது. அதில் கணிசமான அளவு குழந்தை தொழிலாளிகளை பயன்படுத்தி உருவாகப்பட்டது.

குழந்தைகளின் உழைப்பை திருடுவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை லட்சகோடி ரூபாய் கருப்பு பணமாக மாறுகிறது என்கிறது டில்லியை சார்ந்த குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் என்கிற அரசு சார அமைப்பு.

பள்ளிக்கூடம் செல்ல வாய்ப்பு மறுக்கபட்டிருக்கும் அனைத்து குழந்தைகளையும் குழந்தை தொழிலாளர்களாக கருத வேண்டும் என்கிறது யுனிசெப். அதுபோல் பதினெட்டு வயது நிரம்பாத அனைவரையும் குழந்தைகளாக கருத வேண்டும். அனால் இந்திய அரசு பதினான்கு வயது வரை உள்ளவர்களை மட்டுமே குழந்தை தொழிலாளர்களாக கணக்கிடுகிறது.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் இந்த அவல நிலை இன்னும் மாறவில்லை. தற்போதுள்ள கட்டாயகல்வி சட்டத்தை முழுமையாககவும், சிறிது கரராகவும் அமல் படுத்தினாலே இந்த கொடுமை முடியும்.